📚 கற்றல் முதன்மை க.பொ.த. (சா/த) க.பொ.த. (உ/த) பிற 🌐 English உள்நுழைய
முகப்பு · சா/த · தமிழ் · பழைய வினாத்தாள்கள் · 2016

📄 சா/த தமிழ் — 2016 (டிசம்பர்)

விடைகள் பற்றி இவை உண்மையான வினாத்தாள் வினாக்கள். விடைகள் NIE பாடநூலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை — உத்தியோகபூர்வ விடைத்திட்டத்துடன் சரிபார்க்கவும்.

பகுதி II — கட்டமைப்பு வினாக்கள்

வினா 1 (கட்டாயம்). Paper II · இலக்கண வினாக்கள் — 10 உப வினாக்கள் (20 புள்ளிகள்) த10·அ4
(i) பின்வரும் தொடரைச் சந்திபிரித்து எழுதுக: 'அங்கழியும்தான் தனதென்ற சிறுவட்டம்'

(ii) "போடா மூதேசி! இதிலே நிண்டியோ ஏப்பைக் காம்பாலை வாங்கப் போறாய் என்னட்டை."
(அ) மேற்படி வாக்கியம் எந்தப் பிரதேச வழக்கு?
(ஆ) 'ஏப்பைக் காம்பு' என்பதன் திருத்தமான வடிவம் யாது?

(iii) பின்வரும் வாக்கியத்தைப் பொருத்தமான நிறுத்தக்குறியீடு கொண்டு அமைக்குக:
"சிறுமி என்னை இல் அடக்குமுறையிலிருந்து காப்பாற்றுபவர்கள் யாருமில்லையா என அழுதாள்."

(iv) 'ஏகபோகம்' என்ற சொல்லின் கருத்துப் புலப்படுமாறு அச்சொல்லை ஒரு வாக்கியத்தில் அமைத்துக் காட்டுக.

(v) 'நுணி' என்ற சொல் பெயராகவும் வினையாகவும் வரத்தக்கதாகத் தனித்தனி வாக்கியங்கள் எழுதுக.

(vi) "வ.வே.சு. ஐயரால் பாரதியின் கவிதைகளுக்கு விமர்சனம் எழுதப்பட்டது." — இதனைச் செய்வினை வாக்கியமாக மாற்றி எழுதுக.

(vii) 'தலையிருக்க வால் ஆடக்கூடாது' என்ற மரபுத்தொடரின் பொருள் யாது?

(viii) பின்வரும் வாக்கியத்தின் எழுவாய், பயனிலைகளைக் குறிப்பிடுக:
"கணங்களின் பேராற்றில் மின்னி மறைகின்றன பல்லாயிரம் எண்ணக் குவியல்கள்."

(ix) பின்வரும் வாக்கியத்திலுள்ள மயக்கத்தை நீக்கி எழுதுக:
"நாற்பது வயதைக் கடந்த அந்த வீட்டின் பெண்மணி கூண்டினைத் தொட்டுப் பார்த்தாள்."

(x) "கவிமணியின் பாடல்கள் எளிமை நிறைந்தவை." "கவிமணியின் பாடல்கள் இனிமை நிறைந்தவை." — மேற்படி தனி வாக்கியங்களைக் கூட்டு வாக்கியமாக அமைக்குக.
வினா 2. Paper II · கட்டுரை / உரையாடல் / மேடைப்பேச்சு / சிறுகதை (25 புள்ளிகள்) த10·அ3
பின்வருவனவற்றுள் ஒன்றைத் தெரிவுசெய்து ஏறத்தாழ 250 சொற்களில் தலையங்கமிட்டு எழுதுக:

(i) எந்த நாட்டிலும் சிறுவர் நலன்கள் பேணப்பட வேண்டும். அவர்களுக்கான உரிமைகளை மறுத்தல் கூடாது. நாளைய தலைவர்கள் அவர்களே. எனவே கல்வி, விளையாட்டு முதலான சகல உரிமைகளையும் வழங்கி அவர்களை உருவாக்க வேண்டும் என்னும் நோக்கிலமைந்த ஒரு விளக்கக் கட்டுரை.

(ii) குடும்பத்தலைவிகள் பொருள்தேடி வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்வதனால் குடும்பங்கள் பொருளாதாரம், அந்தஸ்து முதலான விடயங்களில் உயர்கின்றன என்ற கருத்துடைய ஒருவருக்கும், உரிய பராமரிப்பின்மை, ஒழுக்கக்கேடு முதலான காரணங்களால் குடும்பங்கள் சிதைகின்றன என்ற கருத்துடைய ஒருவருக்குமிடையேயான ஓர் உரையாடல்.

(iii) ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அந்த நாட்டின் விவசாயம், தொழில்துறை முதலியவற்றின் விருத்தியிலேயே பெரிதும் தங்கியுள்ளது. ஆகவே உள்நாட்டு உற்பத்திப்பொருட்களைக் கொள்வனவு செய்வதன் மூலம் அவற்றுக்கு ஆதரவளிப்பதிலேயே அந்நாடு பொருளாதார நிலையில் முன்னேற முடியும். இதனை விடுத்து இறக்குமதிப் பண்டங்கள்மீது மோகம் கொண்டு அவற்றை நுகர்வதால் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் என்ற பொருளிலமைந்த ஒரு மேடைப்பேச்சு.

(iv) இன்று அந்தத் தாய் முதியோர் பராமரிப்பு விடுதியொன்றில் அடைக்கலமாகியுள்ளாள். இத்தனைக்கும் அவள் ஏழையல்ல. அவளது பிள்ளைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல நிலையில் உள்ளனர். ஆனாலும் அந்தத் தாயை அருகிலிருந்து பராமரிக்க இன்று யாருமில்லை. ஆனால் அவளோ தன் பிள்ளைகளின் நலனுக்காக இன்னும் பிரார்த்தனை செய்கிறாள். ஏனெனில் அவர்களை ஆளாக்க அவள் பட்ட பாடு அப்பப்பா கொஞ்சநஞ்சமல்ல! என்ற கருப்பொருளிலமைந்த ஒரு சிறுகதை.
வினா 3 (கட்டாயம்). Paper II · மொழி (பேச்சு vs எழுத்து) உரைப்பகுதி சுருக்கம் 40-45 சொற்கள் (10 புள்ளிகள்) த10·அ2
3. கீழே தரப்பட்டுள்ள உரைப்பகுதியின் சுருக்கத்தை 40-45 சொற்களில் எழுதுக (சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக).

"பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவைகளே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவைகளும் மொழியே ஆகும்.

பழங்காலத்தில் வாழ்ந்திருந்த சில விலங்குகளின் உடலமைப்பு இன்னதெனக் காட்டும் கற்படிவுகளைப் போன்றவை வழக்கிறந்த மொழிகள். விலங்குகளின் உடலுறுப்புக்கள் கல்லில் படிந்து விளங்குவது போல், ஒரு காலத்தில் மக்களால் பேசப்பட்டுவந்த ஒரு மொழி இலக்கிய வடிவில் அழியாமல் நின்று அதன் தன்மையைக் காட்டுகின்றது.

புலன்களால் உணரப்படும் குறியீடுகள் உடையது மொழி எனலாம். பொருள்களுக்கு உரிய ஒலிவடிவான குறியீடுகள் கொண்டது பேச்சுமொழி ஆகும். எழுத்து வடிவான குறியீடுகள் கொண்டது எழுத்துமொழி ஆகும். இவை செவிப்புலனும் கட்புலனும் பற்றுக்கோடாகக் கொண்டு வழங்கும் மொழிகள்.

மொழி என்பது உண்மையாக நோக்கின், ஒருவர்க்கு ஒருவர் நேரே நின்று கருத்தை உணர்த்தும்போது பயன்படும் கருவியே ஆகும். அவ்வாறு நேரே நின்று உணர்த்த முடியாதபோது அதற்கு உதவியாக வந்து அமைந்த துணைக்கருவியே இலக்கியம், கல்வெட்டு, கடிதம் முதலிய எழுத்து வடிவங்கள். பேச்சுமொழி ஒருவரது உடல் போன்றது என்றால் எழுத்துமொழி அவருடைய படம் போன்றது எனலாம். ஆகவே மொழியாராய்ச்சிக்கு எழுத்துமொழி எவ்வளவு பயன்பட்ட போதிலும் பேச்சுமொழி இன்றியமையாததாக உள்ளது."
வினா 4 (கட்டாயம்). Paper II · சீன நீதி நூல்கள் உரைநடை வினாக்கள் (10 புள்ளிகள்) த10·அ2
4. பின்வரும் உரைநடைப் பகுதியை வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக:

"சீன மொழியில் நீதி நூல்கள் பல உள்ளன. எனினும், அவற்றுள் கன்பூசியஸின் 'முதுமொழி'யும் 'நடு வழிக் கோட்பாடு'மே சிறப்புடையன. மற்ற நூல்கள் எல்லாம் வெறும் தத்துவ ஆராய்ச்சி நூல்களாக உள்ளன. லவோட்ஸுவின் 'வாழ்க்கை நெறி'யில் இலக்கிய இன்பம் பயக்கும் இனிய இயல்புகள் பல உள்ளன. ஆயினும், அந்நூலை நாம் நீதி இலக்கியமாகக் கொள்ளுவதற்கில்லை. அதை சறாயற் பண்புடைய தத்துவ நூலாகவே நாம் கருத நேரிடுகிறது. அறத்தைப் பற்றிய கருத்துக்கள் அதில் இலைமறைகாய் போன்று உள்ளன.

கன்பூசியஸின் முதுமொழி நல்லதொரு நீதி நூலாகும். அதில் கருத்துவளம் இருக்கிறது; கற்பனை நலமில்லை; கலையழகு இல்லை. இலக்கியத்தின் நறுமணம் அதில் கமழவில்லை."

(i) சீன மொழியில் எழுந்த நீதி நூல்களாக இங்கே குறிப்பிடப்படுபவை எவை?
(ii) அந்நூல்களின் ஆசிரியர்கள் யாவர்?
(iii) 'வாழ்க்கை நெறி' என்ற நூலை நீதி நூலாகக் கொள்வதில் ஆசிரியர் ஏன் தயக்கம் காட்டுகிறார்?
(iv) 'முதுமொழி' என்ற நூலில் ஆசிரியர் காணும் குறைபாடு யாது?
(v) 'இலைமறைகாய் போல' என்ற உவமைத்தொடர் இங்கே எதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது?
வினா 5. Paper II · கடிதம் அல்லது பத்திரிகைச் செய்தி (15 புள்ளிகள்) த10·அ3
5. பின்வருவனவற்றுள் ஒன்றைத் தெரிவுசெய்க:

(i) உமது கிராமத்தில் பெரும்பாலானவர்கள் வறியவர்கள். பாடசாலை நேரம் தவிர பிள்ளைகள் படிப்பதற்கு வீடுகளில் வசதியான சூழல் இல்லை. வறிய மாணவர்கள் சுயமாகக் கற்பதற்கு வாய்ப்பான படிப்பகம் ஒன்றை உமது ஊரில் நிறுவுவது நல்லதென்று கருதுகிறீர். அதை நிறுவித் தருமாறு கேட்டு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவருக்கு 100 சொற்களில் ஒரு கடிதம் எழுதுக.

(ii) உமது பாடசாலையின் விளையாட்டுக் குழுவின் செயலாளராக உம்மைக் கருதிக்கொண்டு, உமது பாடசாலையில் நடைபெறவிருக்கின்ற வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி தொடர்பான செய்திகளைப் பிரசுரிப்பதற்காகப் பின்வரும் அம்சங்களைக் கருத்திற் கொண்டு 100 சொற்களில் பத்திரிகைச் செய்தி ஒன்று எழுதுக:
• பாடசாலையின் பெயர் • இல்லங்கள் பற்றிய விபரங்கள் • காலமும் நேரமும்
• பிரதம அதிதி, சிறப்பு அதிதிகள் • நிகழ்ச்சிகள் • அனுசரணையாளர்கள்
வினா 6 (கட்டாயம்). Paper III · சுருக்கமான விடை — இலக்கியம் (20 புள்ளிகள்) த10·அ4
1. சுருக்கமான விடை தருக:

(i) "விலகு பிள்ளை... அது கிடக்க எடுத்துக்கொண்டு வா, தந்தி தபாற் கட்டுகளை."
(அ) இக்கூற்றைக் கூறியவர் யார்?
(ஆ) 'பிள்ளை' என்று இங்கே குறிப்பிடப்படுபவரின் முழுப்பெயர் யாது?

(ii) "பகழற்கான் மைந்த இன்றுணைவன் இராகவனுக்கு இலக்குவற்கும் இளையாற்கும் எனக்கும் மூத்தான்..."
(அ) இப்பாடலடிகளில் 'மூத்தான்' எனக் குறிப்பிடுவது யாரை?
(ஆ) 'இளையவன்' எனக் குறிக்கப்படுபவன் யார்?

(iii) "...நற்றேர்ப் பொய்கை ஊரன் கேண்மை செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே."
(அ) 'கேண்மை' என்பதன் பொருள் யாது?
(ஆ) 'பொய்கையூரன்' என்ற தொடர் எந்நிலத்துத் தலைவனைக் குறித்து நிற்கிறது?

(iv) "கதியிழக்கினும் கட்டுரை யிழக்கிலோம் என்றான் மதியிழந்துதன் வாயிழந்தருந்தவன் மறைந்தான்"
(அ) 'கட்டுரை' என்ற சொல் இங்கு எதனைக் குறிக்கிறது?
(ஆ) இதனைப் பாடிய புலவரின் பெயர் யாது?

(v) "சீனத்துச் செப்பே என்ற சிங்காரப் பூநிலவே
வானத்தைப் பார்த்து மச்சி வாடுவது என்னத்திற்கோ?"
(அ) இங்கு பயின்றுள்ள அணியை இனங்காண்க.
(ஆ) 'மச்சி' என்ற உறவுமுறைப் பெயரின் திருத்தமான வடிவம் யாது?

(vi) "மஞ்சோனா மரத்திலிருந்து இப்போதுதான் பக்குல் பறந்து போனது"
(அ) 'மஞ்சோனா மரம்' என்பதன் திருத்தமான வடிவம் யாது?
(ஆ) 'பக்குல்' எனும் பறவையைக் குறிக்கும் வேறு பெயர் ஒன்று தருக.

(vii) "நண்பா கம்பியூட்டருக்கு தலபுராணம் எழுதியவர் விடுவாரா? இப்போது வட்டியும் முதலுமாக அவர்களைப் போட்டு குடைகுடையென்று குடைந்தார்..."
(அ) 'தலபுராணம்' என்றால் என்ன?
(ஆ) 'தலபுராணம்' என்ற தொடர் இங்கே என்ன பொருளில் கையாளப்பட்டுள்ளது?

(viii) "கூட்டிற் பசுங்கிளிபோற் கோதையரை எப்பொழுதும்
வீட்டிலடைத்து வைக்கும் விரகிலருக்கியாதுரைப்போம்"
(அ) 'விரகிலர்' என்போர் யார்?
(ஆ) மேற்படி அடிகள் மூலம் கவிஞர் உணர்த்த விரும்புவது யாது?

(ix) "கணக்காயரில்லாத வூரும் பிணக்கறுக்கும் மூத்தோரை யில்லா வவைக்களனும்..."
(அ) 'கணக்காயர்' என்று குறிப்பிடப்படுபவர் யார்?
(ஆ) 'பிணக்கறுத்தல்' என்பதனால் விளங்கிக்கொள்வது யாது?

(x) "தொல்காப்பியர் கருப்பொருளில் பண்பாட்டுத் துறைகள் சிலவற்றைக் கூறுகிறார். அவற்றுள் வழிபாடும் இசையும் இசைக்கருவிகளும் சில."
(அ) கருப்பொருள் என்றால் என்ன?
(ஆ) கருப்பொருள் பற்றிக் கூறும் இலக்கண நூல் யாது?
வினா 7 (கட்டாயம்). Paper III · கவிதை/உரைநடை பகுப்பாய்வு (20 புள்ளிகள்) த11·அ9
2. பின்வரும் செய்யுட் பகுதிகளையும் உரைநடைப் பகுதிகளையும் வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக:

(a) புலங்களோடு கரணமும் ஆவியும் போந்து நின்ற விருப்புடன் மானிடன்
நலங்களேதும் விரும்புபவன் அங்கவை நண்ணுறப் பெறல் திண்ணம் தாமென
இலங்கு நூலுணர் ஞானியர் கூறுவர்; யானும் மற்றது மெய்யெனத் தேர்ந்துள்ளேன்;
விலங்கி யற்கை யிலையெனில் யாமெலாம் விரும்பு மட்டினில் விண்ணுற லாகுமே.
(அ) மானிடன் விரும்பியவற்றை அடையும் வழிவகை எதுவென்று ஞானியர் குறிப்பிடுகின்றனர்?
(ஆ) 'விலங்கியற்கை' என்ற தொடரினூடாக நீர் விளங்கிக்கொள்வது யாது?

(b) பட்டி பெருகவேணும் தம்பிரானே
பாற்பரனை பொங்கவேணும் தம்பிரானே
மேழி பெருகவேணும் தம்பிரானே
நாடு தழைக்கவேணும் தம்பிரானே
நல்ல மழை பெய்யவேணும் தம்பிரானே
ஏர் தழைக்கவேணும் தம்பிரானே
எல்லோரும் வாழவேணும் தம்பிரானே
(அ) இப்பாடலில் கலப்பையைக் குறிப்பனவாக அமைந்துள்ள இரண்டு சொற்களும் எவை?
(ஆ) விவசாயியின் பரந்த நோக்கு இப்பாடலில் எவ்வாறு புலப்படுகிறது?

(c) குளித்து மணற் கொண்ட கல்லா விளமை அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் ஒன்றி நடுக்குற் றிருமிடை மிடைந்த சில சொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே
(அ) முதுமையின் இரங்கத்தக்க நிலை இங்கு எவ்வாறு விவரிக்கப்படுகிறது?
(ஆ) 'கல்லா விளமை' என்பதனூடாக இளமைப் பருவத்தின் எத்தகைய தன்மை புலப்படுத்தப்படுகிறது?

(d) "சினிமா மொழியை, அதன் தன்மையை, தனித்துவத்தை உணர்ந்து, ஒரு படைப்பாளி அதை அழுத்தமாகக் கையாளும்போது, அங்கே நல்ல சினிமா பிறக்கிறது. இந்த மொழியிலிருந்து மாறுபட்ட வாய்ப்பேச்சினால் கதை சொல்ல முற்பட்டால் அங்கே சினிமா நலிவடைகிறது. பேசும் மொழி போலவே இந்த மொழியின் நயம் அதைப் பயன்படுத்தும் படைப்பாளியின் திறனை, கற்பனை வளத்தைப் பொறுத்தது. சூரியன் உதயமாவதைக் கண்டால் ஒருவன் 'ஒகோ விடிகிறது' எனலாம். கவிஞன் அதைக் கண்டாலோ 'பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்' என்கிறான்."
(அ) நல்ல சினிமா பிறப்பதும் நலிவடைவதும் எதனால்?
(ஆ) மொழியின் நயம் அதைப் பிரயோகிப்பவனைப் பொறுத்தது என்பதை எழுத்தாளர் எவ்வாறு விவரிக்கிறார்?

(e) "என் அருமைச் செல்வங்களே... புறப்பட வேண்டியதுதான். பறம்பு மலையின் இனிய சுனை நீரில் ஒரு முடக்கு குடியுங்கள். கடைசியாக முடிந்த மட்டுக்கும் இந்த மலைப்பூக்களின் மணத்தை இழுத்து மூச்சடக்கிக் கொள்ளுங்கள். கடந்து செல்கையில் காற்று வீசும். ஆனால், இந்த மலைப்பூக்களின் மணம்... பறவைகளின் ஒலி ஓயாது. பாரி இருந்தால் பேச்சுக் கொடுப்பார்... புறப்படுகிறோம் பறம்பே... மதுவிலும் புலாலிலும் களித்திருந்த நட்பு நம்முடையது."
(அ) இக்கூற்று எத்தகைய மனநிலையில் கபிலரால் கூறப்பட்டது?
(ஆ) பாரியிடம் கபிலருக்குள்ள ஈடுபாடு எவ்வாறு புலனாகின்றது?
வினா 8 (கட்டாயம்). Paper III · திருக்குற்றால குறவஞ்சி அல்லது குகப்படலம் (15 புள்ளிகள்) த11·அ9
3. திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற பாடப்பகுதியில்,
(அ) நாட்டு வளம்
(ஆ) திரிகூடநாதரின் சிறப்பு
என்பன விவரிக்கப்படுமாற்றினை விளக்குக.

அல்லது

குகப்படலத்தில் பரதன்,
(அ) கோசலை மீது கொண்ட மதிப்பும்
(ஆ) கைகேயி மீது கொண்ட வெறுப்பும்
புலப்படுத்தப்படுமாற்றை விவரிக்குக.
வினா 9 (கட்டாயம்). Paper III · பேதமை அதிகாரம் அல்லது "கம்பியூட்டர்" சிறுகதை (15 புள்ளிகள்) த11·அ9
4. திருக்குறளிலுள்ள 'பேதமை' என்ற அதிகாரத்தின் அடிப்படையில்,
(அ) பேதமை என்றால் என்ன?
(ஆ) பேதையர் அடையும் துன்பம்
என்பவற்றை விளக்குக.

அல்லது

'கம்பியூட்டர்' என்ற சிறுகதையில் அதன் ஆசிரியர்,
(அ) கம்பியூட்டர் பற்றி விவரிப்பனவற்றையும்
(ஆ) அதற்குத் தாம் கையாண்ட உத்திகளையும்
விளக்குக.
வினா 10. Paper III · "சீறி ஓடாத வருங்கால மனித நதி" கவிதை (Q5/6/7, 10 புள்ளிகள்) த11·அ6
5. 'சீறி ஓடாத வருங்கால மனித நதி' என்ற கவிதையில்,
(அ) இளைஞனின் தோற்றமும்
(ஆ) கல்லாத அவ்விளைஞன் பற்றிய கவிஞரின் கவலையும்
வெளிப்படுமாற்றை விளக்குக.
வினா 11. Paper III · "தத்த விடுதூது" பெண்விடுதலை (Q5/6/7, 10 புள்ளிகள்) த11·அ6
6. 'தத்த விடுதூது' என்ற பாடப்பகுதியில்,
(அ) பெண்விடுதலை குறித்த கவிஞரின் கருத்துகள்
(ஆ) பெண்ணடிமை செய்வோர் மீதான அவரது சினம்
ஆகியவை புலப்படுமாற்றினை விளக்குக.
வினா 12. Paper III · "இலட்சியமும் சமநோக்கும்" — கண்ணகி, சந்திரமதி (Q5/6/7, 10 புள்ளிகள்) த11·அ9
7. 'இலட்சியமும் சமநோக்கும்' என்ற கட்டுரையின் அடிப்படையில்,
(அ) கண்ணகி
(ஆ) சந்திரமதி
ஆகியோர் தத்தமது இலட்சியங்களை எவ்வாறு பேணி நடந்துகொண்டார்கள் என்பதை விளக்குக.

பகுதி I — புறவய வினாக்கள் (MCQ)

MCQ விடைகள் புறவய விடைகள் உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் சரிபார்க்கவும். ✓ குறி திட்டமிட்ட விடையை மட்டும் குறிக்கிறது.
  1. 'தெண்ணீரக் கயத்துட் சிறுமீன்' — இங்கு **கயம்** என்பது:
    1. யானை
    2. குளம்
    3. கயல்மீன்
    4. குடம்
  2. "வெங்கட் பிறைக்கும் **கரும்பிறைக்கும்** மெலிந்து" — இங்கு கரும்பிறை என்பது:
    1. அரிய பிறை
    2. கரிய பிறை
    3. மன்மதன்
    4. பிறைசூடி
  3. "**பேதமை** என்பது ஒன்று யாதெனில் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல்" — பேதமை என்பதன் எதிர்க்கருத்து:
    1. அறிவுடைமை
    2. அறியாமை
    3. போதாமை
    4. திருப்தி
  4. "**தூலவடிவில்** நின்றும் மறைந்த இலட்சியபுருடர்களை..." — தூலவடிவு என்பதன் எதிர்க்கருத்து:
    1. தாயவடிவு
    2. சூக்குமவடிவு
    3. அசுத்தவடிவு
    4. பெருவடிவு
  5. 'விசேஷ மூன்றுங் குலாவுள்ள நாடு' — விசேஷ மூன்றும் என்பதனுள் **அடங்காதது** எது? (நித்தியம், நைமித்தியம், காமியம் = மூன்று):
    1. நித்தியம்
    2. அறித்தியம்
    3. நைமித்தியம்
    4. காமியம்
  6. "கணிப்பொறி எத்தனை பக்கம், எத்தனை வரிகள், எத்தனை **பராக்கள்** என்று கச்சிதமாகச் சொல்லிவிடும்" — பராக்கள் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல்:
    1. அடிகள்
    2. பந்திகள்
    3. விடயங்கள்
    4. இடைவெளிகள்
  7. பொருத்தமற்ற சொற்களின் இணைப்பு:
    1. செய்யுள் — அடி
    2. கட்டுரை — பந்தி
    3. சொல் — எழுத்து
    4. எழுத்து — நிறுத்தக்குறி
  8. சினிமாத் துறையில் **எடிடிங்** (Editing) என்பது:
    1. ஒலிப்பதிவு
    2. படத்தொருப்பு
    3. ஒளிப்பதிவு
    4. படவிநியோகம்
  9. குதிரை, தானியப் பொடி, பெரிய என்னும் பல பொருள் தரும் சொல்:
    1. கா
    2. திரு
    3. மா
    4. இரா
  10. பெண்மான் **பிணை** எனப்படுவது போல, பெண் யானையைக் குறிக்கும் சொல்:
    1. கரி
    2. பிடி
    3. களிறு
    4. கஜம்
  11. **நியாயம் கேட்டல்** என்னும் பொருள் தரும் மரபுத்தொடர்:
    1. தட்டிப்பேசுதல்
    2. தட்டிப்பார்த்தல்
    3. தட்டிக்கேட்டல்
    4. தட்டிக்கொடுத்தல்
  12. "எப்படியும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று அவன் **ஒற்றைக்காலில் நிற்கிறான்**" — இம்மரபுத்தொடரின் பொருள்:
    1. பலமற்று நிற்றல்
    2. பிடிவாதமாக நிற்றல்
    3. உறுதியற்று நிற்றல்
    4. ஆரைப்படுதல்
  13. சபையில் சொல்லத்தகாத சொல்லைத் தவிர்த்து வேறு வகையில் சொல்லுவது:
    1. மற்றொன்று விரித்தல்
    2. மறைமொழி
    3. ஓம்படைக் கிளவி
    4. இடக்கரடக்கல்
  14. வீண்செலவு செய்பவன்:
    1. உதவாக்கரை
    2. கருமி
    3. ஊதாரி
    4. பேதை
  15. இளமைக் காலத்திலேயே ஒழுக்கமாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்; வயதானபின் திருத்த முடியாது என்பதை வலியுறுத்தும் பழமொழி:
    1. இளமையிற் கல்வி சிலையில் எழுத்து
    2. அஞ்சிலே வளையாதது ஐம்பதில் வளையுமா?
    3. ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    4. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
  16. **ஈகைக் குணத்தை** வலியுறுத்தும் பழமொழி:
    1. இரக்கப் போனாலும் சிறக்கப் போ
    2. கெட்டாலும் செட்டி; கிழிந்தாலும் பட்டு
    3. இட்டுக் கெட்டார் எங்குமே
    4. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
  17. '**ஆற்றிலே கரைத்த புளி போல**' என்ற உவமைத் தொடருக்கு நிகரான பிறிதொரு உவமைத் தொடர் (வீணாகப் போவது என்ற பொருளில்):
    1. அணை கடந்த வெள்ளம் போல
    2. காட்டில் எறித்த நிலாப் போல
    3. ஆனை வாயிற் கரும்பு போல
    4. ஆனை உண்ட விளாம்பழம் போல
  18. "**வாழையடி வாழையாக**" என்ற அருஞ்சொற்றொடரால் உணர்த்தப்படுவது:
    1. நன்றியுணர்வு
    2. மாற்றமின்மை
    3. பாரம்பரியத் தொடர்ச்சி
    4. உபகாரத் தன்மை
  19. "எந்தக் காரிருளையும் கிழித்துக்கொண்டு **குடுகுடுவென** நடக்கும் மனோதைரியம்..." — குடுகுடு என்பது:
    1. அடுக்குத்தொடர்
    2. இணைமொழி
    3. அடுக்கிடுக்குத் தொடர்
    4. இரட்டைக் கிளவி
  20. "நாத்தோம் இல் உரை பதறக் **கதும்** என உற்றெழுந்து..." — கதும் எனும் ஒலிக்குறிப்புச் சொல் உணர்த்தும் பொருள்:
    1. விரைவு
    2. நிதானம்
    3. துக்கம்
    4. பயம்
  21. பின்வருவனவற்றுள் **பகாப்பதம்** (மேலும் பிரிக்க முடியாத சொல்):
    1. ஊரன்
    2. அழகு
    3. வாட்டம்
    4. பாடல்
  22. **உடன்நிலை மெய்ம்மயக்கம்** (ஒரே மெய் இரண்டு தடவை வரும் சொல்) இடம்பெற்ற சொல்:
    1. கழுத்து
    2. பந்து
    3. காய்ந்து
    4. மஞ்சள்
  23. பின்வருவனவற்றுள் **பெயரடை** (adjective):
    1. வேகமாக
    2. வேகமாய்
    3. வேகமான
    4. வேகவேகமாய்
  24. **வேற்றுமைப் பொருளால்** வேறுபட்டமையும் தொடர்:
    1. என் புத்தகம்
    2. எனது நண்பன்
    3. மரக்கலம்
    4. மேற்கு வீதி

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  25. **இயல்பு புணர்ச்சி** (இயல்பான சேர்க்கை — மாற்றமின்றி) இடம்பெற்றமைந்தது:
    1. கல்லெறிந்தான்
    2. சோறுண்டான்
    3. வேலெறிந்தான்
    4. சோற்றுருண்டை
  26. "அவன் ஒழுங்காகப் படிக்கவில்லை. அவன் பரீட்சையில் சித்தியடையவில்லை." — இரு வாக்கியங்களையும் இதே ஒழுங்கில் இணைப்பதற்குப் பொருத்தமான இணைப்பிடைச்சொல்:
    1. எனினும்
    2. என்றாலும்
    3. எனவே
    4. இருப்பினும்
  27. "கேண்மை செய்து **இன்புற்றனெம்** செறிந்தன வளையே" — இன்புற்றனெம் என்பது:
    1. படர்க்கை வினைமுற்று
    2. தன்மை வினைமுற்று
    3. முன்னிலை வினைமுற்று
    4. குறிப்பு வினைமுற்று
  28. **அகராதி ஒழுங்கில்** அமைந்த சொற்றொகுதி:
    1. கீரி, குதிரை, கூடு, கொப்பு
    2. சேதி, பாதி, சாதி, நீதி
    3. ஆலை, காலை, வேலை, சாலை
    4. நாடு, நேர்மை, நன்மை, நிறம்
  29. பொருத்தமற்ற உதாரணம் இடம்பெற்ற சொற்றொகுதி (பெயர்ச்சொல் வகை):
    1. கூட்டுப்பெயர் : கடற்கரை, நூல்நிலையம், சமையலறை
    2. ஆக்கப்பெயர் : கூட்டாளி, சமூகவியல், மலர்ச்சி
    3. தொழிற்பெயர் : ஆடுதல், போகாமை, வந்தவன்
    4. மாற்றுப்பெயர் : அவன், நான், இது
  30. பொருத்தமற்ற உதாரணம் இடம்பெற்ற சொற்றொகுதி (வினை வகை):
    1. முற்றுவினை : வந்தான், படிப்பான், சென்றேன்
    2. எச்சவினை : வந்து, படித்து, சென்ற
    3. தன்வினை : படித்தான், குடித்தான், உதவினான்
    4. பிறவினை : படிப்பித்தான், ஊட்டினான், கண்டான்
  31. நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் உணர்த்துவனவாய் அமையும் தொல்பொருட்கள் _______ காட்சிப்படுத்தப்பட்டுள்ளன:
    1. சுவடிகள்கூடத்தில்
    2. களஞ்சியசாலையில்
    3. நூதனசாலையில்
    4. திறைசேரியில்
  32. வேலைக்கு ஆட்சேர்ப்பது தொடர்பான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ விளம்பரம் _______ வெளிவந்துள்ளது:
    1. ஸ்தமானியில்
    2. சுற்றுநிருபத்தில்
    3. வெள்ளையறிக்கையில்
    4. பாராளுமன்றத்தில்
  33. அகராதி, _______ என்பன சொற்களை அகரவரிசையில் ஒழுங்குபடுத்தி அவற்றின் பொருளையும் விபரங்களையும் தரும் கருவி நூல்களாகும்:
    1. இலக்கணம்
    2. தருக்கம்
    3. கலைக்களஞ்சியம்
    4. ஆவணம்
  34. _______ என்பது நூலின் தொடக்கத்தில் அதன் ஆசிரியர் அல்லாத வேறொருவரால் எழுதப்படுவதாகும்:
    1. முன்னுரை
    2. நான்முகம்
    3. அணிந்துரை
    4. பொருளடக்கம்
  35. மாணவர்களோடு சேர்ந்து **ஆசிரியரும்** சிரமதானத்தில் ...........
    1. ஈடுபட்டவர்
    2. ஈடுபட்டார்கள்
    3. ஈடுபடுவர்
    4. ஈடுபட்டார்
  36. இன்று ஜனாதிபதி தலைமையில் **கூடும் அமைச்சரவை** நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக விரிவாக ...........
    1. ஆராய்ந்தது
    2. ஆராய்ந்தார்கள்
    3. ஆராயவுள்ளது
    4. ஆராய்வார்கள்
  37. [கவிதை: இரவினில் உலகினை மறைத்து வைத்திருந்த...செங்கதிரவன் உதயம் செய்கின்றானே]

    இரவில் உலகத்தை மறைத்து வைத்திருந்தது எது?
    1. தாமிரத் தட்டம்
    2. பனிப்படலம்
    3. இருள்
    4. எரிதிரள்
  38. மேற்படி கவிதையில் சூரியனது **கரங்களாகவும்** சூரியனது **பகையாகவும்** உருவகிக்கப்படுவன, முறையே:
    1. இருள், உலகு
    2. கிரணங்கள், பனி
    3. எரிதிரள், பனி
    4. இருள், கிரணங்கள்
  39. மேற்படி கவிதையின் கருத்துக்குப் **பொருந்தாத** சொற்று:
    1. உதயசூரியன் தாமிரத் தட்டம்போலத் தோற்றமளிக்கின்றது
    2. உதயசூரியன் நெருப்புத்திரள் போலத் தோற்றமளிக்கின்றது
    3. சூரியன் உலகத்து இருளைப் பிடித்து வைத்திருக்கின்றது
    4. சூரிய உதயத்தால் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்
  40. பின்வரும் வாக்கியங்களை (அ–ஈ) கட்டுக்கோப்பான பந்தியாக வைக்க சரியான ஒழுங்கு:
    அ. மொழிப் பிரயோகத்தில் உள்ள சரி, பிழைகளைக் கண்டுணரும் திறனே அறிதிறன்.
    ஆ. ஒருவன் தாய் மொழியாகிய தமிழைப் பேசுவதாலே அவன் தமிழறிவு பெற்றவனாய் ஆகிவிட மாட்டான்.
    இ. முந்தையது செய்திறன் (performance); பிந்தையது அறிதிறன் (competence).
    ஈ. அத்தகைய திறனைப் பெறுவதே மொழிக் கல்வியாகும்.
    உ. மொழியைப் பேசுவது வேறு; மொழியைப் பற்றித் தெரிந்து கொள்வது வேறு.
    1. உ, ஈ, இ, ஆ, அ
    2. ஆ, உ, இ, அ, ஈ
    3. உ, ஆ, இ, அ, ஈ
    4. அ, ஆ, உ, ஈ, இ
← அனைத்து வினாத்தாள்களும்