📚 கற்றல் முதன்மை க.பொ.த. (சா/த) க.பொ.த. (உ/த) பிற 🌐 English உள்நுழைய
முகப்பு · சா/த · தமிழ் · பழைய வினாத்தாள்கள் · 2019

📄 சா/த தமிழ் — 2019 (டிசம்பர்)

விடைகள் பற்றி இவை உண்மையான வினாத்தாள் வினாக்கள். விடைகள் NIE பாடநூலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை — உத்தியோகபூர்வ விடைத்திட்டத்துடன் சரிபார்க்கவும்.

பகுதி II — கட்டமைப்பு வினாக்கள்

வினா 1 (கட்டாயம்). Paper II · இலக்கண வினாக்கள் — 10 உப வினாக்கள் (20 புள்ளிகள்) த10·அ4
(i) "உயர் குறிக்கோள், ஒருவர் உண்ணும் உணவினும் பருகும் நீரினும் அவருக்கு இனியது" — இந்த வாக்கியத்தின் எழுவாய் யாது?

(ii) பின்வரும் வாக்கியத்துக்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளை இட்டு மீண்டும் எழுதுக:
"இந்தப் புத்தகம் இங்கு எப்படி வந்தது என்றேன்"

(iii) "இளங்கோ அடிகள், தமிழர் தழுவிய பழக்கவழக்கங்களையும் வழிபாட்டு முறைகளையும் கூறியுள்ளார்." — இச்செய்வினை வாக்கியத்தை செயப்பாட்டுவினை வாக்கியமாக மாற்றி எழுதுக.

(iv) "சினிமாவுக்கு கடும் உழைப்பும் பயிற்சியும் அவசியமற்றவை" — இவ்வெதிர்மறை வாக்கியத்தை உடன்பாட்டு வாக்கியமாக்குக.

(v) "கம்பன் இராம கதையைக் காவியமாகப் பாடினான். அதனால் கவிச்சக்கரவர்த்தி என்ற புகழைப் பெற்றான்." — இவ்விரு வாக்கியங்களில் கூறப்பட்ட விடயங்களை ஒரே வாக்கியத்தில் அடக்கி எழுதுக.

(vi) "படிக்காத அந்தப் பையன் பரிதாபமாக நின்றான்" — இவ்வாக்கியத்தில் காணப்படும் பெயரெச்சம் யாது?

(vii) "கூனலிளம்பிறை" — இச்சொற்றொடரைச் சந்திபிரித்து எழுதுக.

(viii) "நாம் பல்லாற் கடித்த தடயங்கள்கூட இருக்கின்றன" — இங்கு இடம்பெற்றுள்ள வேற்றுமை உருபு யாது?

(ix) "நல்ல சினிமாவுக்கு சில அடிப்படை அளவுகோல்கள் உண்டு" — இவ்வாக்கியத்தில் காணப்பெறும் திசைச்சொல் யாது?

(x) "தங்கச்சி விரல் சூப்பிக்கொண்டு அங்குமிங்கும் ஓடித்திரிந்தது" — இப்பேச்சு வழக்கு வாக்கியத்தை எழுத்து வழக்கில் திருத்தி எழுதுக.
வினா 2. Paper II · கட்டுரை / விவரணம் / உரையாடல் / சிறுகதை — ஒன்றை தேர்க (25 புள்ளிகள்) த10·அ3
பின்வருவனவற்றுள் ஒன்றைத் தெரிவுசெய்து ~250 சொற்களில் தலையங்கமிட்டு எழுதுக:

(i) 'உலகின் நுரையீரல்' எனப்படும் அமேசன் காடு அண்மைக்காலத்தில் பல தினங்களாகத் தொடர்ந்து எரிந்தது. அதனால் மரங்கள் ஏராளமாக அழிந்தன; வன விலங்குகள் மடிந்தன; சுற்றுச் சூழல் மாசடைந்தது. வனவளம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம், பாதுகாக்கப்படாவிட்டால் ஏற்படும் தீமைகள் முதலானவற்றை விவரிக்கும் ஒரு விளக்கக் கட்டுரை.

(ii) அண்மையில் நீர் கலந்துகொண்ட கல்விச் சுற்றுலாவின்போது தரிசித்த இடங்கள், கவின்மிகு காட்சிகள், சந்தித்த சமூகத்தவர்கள், அவர்களோடு பேசிப் பழகிப் பெற்ற அனுபவங்கள் முதலானவை உமது கல்விக்கும் பொது அறிவுக்கும் உதவுவனவாக அமைந்தன. அவற்றையெல்லாம் எடுத்துரைப்பதான ஒரு விவரணக் கட்டுரை.

(iii) சிறந்த ஆளுமை உடையவர்களாலேயே வாழ்க்கையில் உயர்நிலை அடைய முடியும். ஆளுமை என்பது பன்முகப்பட்ட ஆற்றல்களின் தொகுதியாகும். கல்வி மட்டும் போதாது; கலை, இலக்கியம், விளையாட்டு முதலான துறைகளிலும் பரிச்சயம் வேண்டும் என்று நம்புவோருக்கும், அவ்வாறு ஈடுபடுவது படிப்பைப் பாழாக்கிவிடும் என்று கருதுவோருக்கும் இடையிலான ஓர் உரையாடல்.

(iv) முயற்சி உடையவர்கள் ஒருபோதும் தாழ்ச்சி அடையமாட்டார்கள். 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்பது பழமொழி. விடாமுயற்சியால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. அடிமட்டத்திலிருந்து தம் முயற்சியால் வாழ்வின் உச்சத்தைத் தொட்ட ஒருவரின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் ஒரு சிறுகதை.
வினா 3 (கட்டாயம்). Paper II · தொடர்பாடல் உரைப்பகுதி சுருக்கம் — 40-45 சொற்கள் (10 புள்ளிகள்) த10·அ2
பின்வரும் உரைப்பகுதியின் சுருக்கத்தை 40-45 சொற்களில் எழுதுக (எண்ணிக்கை குறிப்பிடுக):

"இன்றைய கால கட்டத்தில் தொடர்பாடல் என்பது மிகப் பிரபல்யமானதும் அவசியமானதுமான ஒரு செயற்பாடாகிவிட்டது. இன்று முழு உலகுமே ஒரு கிராமம் என்ற வகையில் சுருங்கி விட்டமைக்கும் நெருங்கி விட்டமைக்கும் இத் தொடர்பாடல் விருத்தியே அடிப்படைக் காரணமாகிவிட்டது எனலாம். கடிதம் முதல் மின்னஞ்சல் வரை பல்வேறு ஊடகங்களும் அகில உலகத்தையுமே ஆட்டிப்படைக்கின்றன. எனவும்கூட, மனிதப் பண்பும் நேயமும் மிக்க நேரடித் தொடர்பானது எல்லாவற்றிலும் மேலானது என்று கூறலாம். பல்வேறு வகைப்பட்டவர்களுடன் தொடர்பாடல் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் நிகழ்காலத்தில் மட்டுமன்றி வருங்காலத்திலும் ஏற்படலாம். அதற்காக நாம் தொடர்பாடலைத் திறன்பட மேற்கொள்ளும் ஆற்றல் பண்பு என்பவற்றை வளர்த்துக்கொள்ளல் மிக அவசியமாகும்."
வினா 4 (கட்டாயம்). Paper II · "ஒன்றே உலகம்" உரைப்பகுதி வினாக்கள் (10 புள்ளிகள்) த10·அ2
4. பின்வரும் உரைப்பகுதியை வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக:

"பழந்தமிழ் இலக்கியச் சிறப்பியல்புகளுள் நம் கருத்தைக் கவரும் சிறந்த பண்பு 'ஒன்றே உலகம்' எனும் உயரிய மனப்பான்மையாம். வெண்டல் வில்கி என்ற அமெரிக்க அறிஞர் எழுதி வெளியிட்ட 'ஒரே உலகம்' என்னும் நூலை மக்கள் இனிதாக வரவேற்றனர். இந்நூல் கருத்தானது உலகம் தழுவியதாக இருந்ததால் இருபதாம் நூற்றாண்டில் ஏனையோர்க்குப் பெரு மகிழ்வு அளித்தது. இதுபற்றி, தமிழராகிய நாம் சிறுபுன்முறுவல் அரும்பி நிற்கிறோம். ஏன்? இருபது நூற்றாண்டுகட்கு முன்னமே தமிழறிஞர் இதனை இனிது உணர்ந்திருந்தனர். இதற்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் பாடல் இடம்பெறும் புறநானூறு தக்க சான்றாகும். இவ்வுயர் பண்பு தமிழர்க்கு எங்ஙனம் அமைந்தது? பிறநாட்டினருடனான வணிகத்தின் பயனாகவும் மூவேந்தருடன் பிறநாட்டு மன்னர்க்கு உண்டான தொடர்பின் பயனாகவுமே பழந்தமிழர்க்கு இப்பரந்த மனப்பான்மை வாய்த்ததெனலாம்.
மேலே எடுத்துக்காட்டிய ஓருலக மனப்பான்மையும் அதற்கு அடிப்படையான பரந்த நோக்கமும் மற்றொரு சிறந்த பண்புக்குக் காரணமாயின. இது கண்ணோட்டம் எனப்படும். இதனைப் பொறை எனலும் பொருந்தும். தமிழ்மொழி வரலாறு நம் மக்களின் ஒப்பற்ற சமயப் பொறைக்குச் சான்றாக அமைந்துள்ளது. இலத்தீன் மொழி மேல்நாட்டுச் சமயங்களின் மொழி. சமஸ்கிருதம் இந்தியச் சமயங்களின் மொழி. ஆனால், பல சமயத்தவர்களும் உரிமை பாராட்டும் சிறப்பு தமிழ்மொழிக்கே உண்டு."

(i) 'ஒன்றே உலகம்' எனும் மனப்பான்மையைத் தமிழர் பழங்காலத்திலேயே பெற்றிருந்தமைக்கு ஆதாரமாக அமைந்த நூல் யாது?
(ii) இம்மனப்பான்மையை பழந்தமிழர் பெற்றுக்கொண்டமைக்கான காரணங்களாகக் கட்டுரையாசிரியர் எவற்றைக் கருதுகிறார்?
(iii) 'பொறை' எனும் பண்புக்கு அடிப்படைகளாக அமைந்தவை எவை?
(iv) பிறமொழிகளோடு ஒப்பிட்டு தமிழ்மொழியின் எச்சிறப்பை ஆசிரியர் பாராட்டுகின்றார்?
(v) தமிழரிடம் சிறுநகை தோன்றுவதற்கான காரணம் யாது?
வினா 5. Paper II · கடிதம் அல்லது துண்டுப்பிரசுரம் (15 புள்ளிகள்) த10·அ3
பின்வருவனவற்றுள் ஒன்றை தேர்க:

(i) பொன்னகரம் பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானமானது நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாதுள்ளது. இதனால் இளைஞர்கள் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. அப்பிரதேச இளைஞர் மன்றத்தின் செயலாளர் க. தேவகுமாரன் என்று உங்களைக் கருதிக்கொண்டு, மைதானத்தைப் புனரமைத்துத் தருமாறு கோரி பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியதாக பொன்னகர பிரதேச செயலாளருக்கு 100 சொற்களில் கடிதம் ஒன்று எழுதுக:
• மைதானத்தின் தற்போதைய நிலை
• அதனால் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
• புனரமைப்பதால் ஏற்படும் நன்மைகள்

(ii) மீட்டெடுத்தலைக் கருதி விவசாயத்துறையில் இரசாயன உரங்களின் பாவனை அதிகரித்துள்ளது. இதனால் நாம் உண்ணும் உணவில் நச்சுத்தன்மை மிகுந்துள்ளது. இவ்வுணவுப் பாவனையால் புற்றுநோய் முதலிய கொடும் நோய்கள் மனித சமுதாயத்தில் பெருகிவருகின்றன. இயற்கை உணவை நோக்கிச் செல்லுவதன் தேவையை வலியுறுத்தி, அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சோழியபுரம் இளம் விஞ்ஞானிகள் சங்கத்தின் சார்பில் 100 சொற்களில் ஒரு துண்டுப்பிரசுரம் எழுதுக.
வினா 6 (கட்டாயம்). Paper III · சுருக்கமான விடை — இலக்கியம் (20 புள்ளிகள்) த10·அ4
1. சுருக்கமான விடை தருக:

(i) "கணக்காயரில்லாதவூரும் பிணக்கறுக்கும் மூத்தோரையில்லா அவைக்களனும்"
(அ) இங்கே 'மூத்தோர்' என்போர் யார்?
(ஆ) 'அவைக்களன்' என்பதன் பொருள் யாது?

(ii) "வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்"
(அ) வானரம் என்பது யாது?
(ஆ) மந்தி என்பது யாது?

(iii) "இன்பப்பயன் காணச் செய்கின்ற இலட்சியம், சமூகமாகிய உடலுக்கு உயிராக அமைந்துள்ளது."
(அ) இங்கு இடம்பெற்றுள்ள அணி யாது?
(ஆ) இங்கு உடலாகவும் உயிராகவும் கருதப்படுபவை யாவை?

(iv) "மாமி மகளே என்ர மருதங்கிளி வங்கிசமே ஏலங்கிராம்பே"
(அ) 'வங்கிசம்' என்பது எதனைக் குறிக்கிறது?
(ஆ) 'கிராம்பே' என்பதை எழுத்து வழக்கில் தருக.

(v) "கொற்றத்தார்க் குரிசில் இவர் யார்?"
(அ) இவ்வாறு வினவியவர் யார்?
(ஆ) 'கொற்றத்தார்க் குரிசில்' எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

(vi) "திணிமணற் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ"
(அ) இங்கு குறிப்பிடப்படும் விளையாட்டு யாது?
(ஆ) இங்கு குறிப்பிடப்படும் பாவை எதனால் ஆக்கப்படுகிறது?

(vii) "அங்கப்பாரு மனே உன்ட மூத்த வாப்பா தலய, சூப்பின பனங்கொட்ட மாதிரி"
(அ) 'மூத்த வாப்பா' எனக் குறிக்கும் உறவுப் பெயருக்குச் சமனான வேறு பெயர் யாது?
(ஆ) இதில் இடம்பெற்ற அணி யாது?

(viii) "நெஞ்சகத்தை நிறைத்திருக்கும் நிர்மலமாம் வானில்
நிறைமதி தன் துணைவியர்கள் சூழவரும் கோலம்"
(அ) இங்கு களங்கமின்மையை உணர்த்தும் சொல் யாது?
(ஆ) 'துணைவியர்கள்' என்று குறிப்பிடப்படுபவை யாவை?

(ix) "நண்பர் 486 கம்பியூட்டர், 486 கம்பியூட்டர் என்று உச்சாடனம் செய்தவாறே அதன் பற்றி ஒரு பரணி பாடினார்"
(அ) இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரபந்தம் யாது?
(ஆ) 'உச்சாடனம் செய்தல்' என்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது?

(x) "முந்து ஊர் வெம் பணிக்கொடியோன் மூதூரில்"
(அ) 'பணிக்கொடி' என்பது எதனைக் குறிக்கிறது?
(ஆ) 'மூதூர்' எனக் குறிப்பிடப்படுவது யாது?
வினா 7 (கட்டாயம்). Paper III · கவிதை/உரைநடை பகுப்பாய்வு (20 புள்ளிகள்) த10·அ4
2. பின்வரும் செய்யுட் பகுதிகளையும் உரைநடைப் பகுதிகளையும் வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக:

(a) உப்பிலாக் கஞ்சியினை யுண்ணு மறுசுவைபோல்
தப்பிய கந்தைபீ தாம்பரம்போல் — ஒப்பும்
பனையோலைப் பாயிற் படுத்துறங்கும் வாழ்வார்
மனங்கொண்டதுமாளிகை
(அ) இப்பாடலில் இடம்பெற்றுள்ள முதுமொழி வலியுறுத்தும் உண்மை யாது?
(ஆ) அதை வலியுறுத்துவதற்கு கவிஞர் தரும் எடுத்துக்காட்டுகள் யாவை?

(b) கழியும் பிழைபொருட்டள்ளிநன்னூலாங் கடலினுண்டு
வழியும் பொதிகை வரையினிற் கால்கொண்டு வண்கவிதை
மொழியும் புலவர் மனத்தேயிடித்து முழங்கிமின்னிப்
பொழியும் படிக்குக் கவிகாளமேகம் புறப்பட்டதே
(அ) காளமேகப் புலவரது கவிபாடும் திறம் எவ்வாறு விவரிக்கப்படுகிறது?
(ஆ) 'நன்னூலாங் கடலினுண்டு' என்ற தொடரில் பயின்றுள்ள அணியை விளக்குக.

(c) முழங்கு திரைப் புனலருவி கழங்கெனமுத்தாடும்
முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்
கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பெடுத்து வெம்புதினை யிடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்
வழங்குகொடை மகராசர் குறும்பலவி ஸீசர்
வளம் பெருகும் திரிகூட மலையெங்கள் மலையே
(அ) குற்றால மலையின் நீர்வளம் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
(ஆ) 'தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்' என்பதனூடாக உணர்த்தப்படுவது யாது?

(d) "பிரசண்ட மாருதத்திற்குப் பிறகு என்று சொல்லுகின்ற 'பிறகு' அந்தச்சபையில் நிலவியது. பேச்சு மூச்சு ஒன்றும் இல்லை. மேலே கிளம்பின பிறிட்டோ கட்சியினர் மெல்ல மெல்லக் கீழே இறங்கித் தரைமட்டத்திற்கு வந்துவிட்டார்கள். தபால் தந்திக் கட்டுக்கள் நாவலர் அவர்களின் முன்னிலைக்கு வந்து சேர்ந்தன. 'ஒருவர் ஒருவராகவோ, இருவர் இருவராகவோ அன்றிப் பலர் கூட்டம் கூட்டமாகவோ வாதத்திற்கு வரலாம்' என்றார் நாவலர் அவர்கள்."
(அ) அங்கு நிலவிய அமைதி கட்டுரையாசிரியரால் எவ்வாறு விவரிக்கப்படுகிறது?
(ஆ) நாவலரது தன்னம்பிக்கை எவ்வாறு புலப்படுத்தப்படுகிறது?

(e) "அன்றிலிருந்து புகையிலைக்கன்றுக்குப் பாத்தி கட்டுவதுபோல கணிப்பொறித் தளத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் நானும், இன்னொரு பகுதியில் மனைவியும், மீதியில் அரவிந்தனுமாகப் பயிர் செய்தோம். எங்கள் படைப்புகளை இந்த வரப்புக்குள் வைத்துக் கொண்டோம். ஆரம்பத்தில் எனக்குக் கம்பியூட்டருடன் ஏற்பட்ட பிணக்கு நீங்கி ஒர் இணக்கம் ஏற்பட்டது. அது தன்னிடமுள்ள சூட்சுமத்தை எல்லாம் மெல்ல மெல்ல அவிழ்த்துவிடத் தொடங்கியது."
(அ) கம்பியூட்டரை இலகுவாகப் பயன்படுத்துவதற்குத் தான் கையாண்ட உத்தியை ஆசிரியர் எவ்வாறு விவரிக்கிறார்?
(ஆ) 'சூட்சுமத்தையெல்லாம் மெல்ல மெல்ல அவிழ்த்துவிடத் தொடங்கியது' என்பதனால் விளங்கிக்கொள்ளக்கூடியது யாது?
வினா 8 (கட்டாயம்). Paper III · குகப்படலம் அல்லது கிருட்டிணன் தூதுச் சருக்கம் (15 புள்ளிகள்) த11·அ9
3. குகப்படலத்தில்,
(அ) பரதனின் துயரம்
(ஆ) சுமித்திரையதும் இலக்குவனதும் புகழ்
என்பன விவரிக்கப்படுமாற்றை விளக்குக.

அல்லது

கிருட்டிணன் தூதுச் சருக்கத்தில்,
(அ) தருமன்
(ஆ) வீமன்
ஆகியோர் போர் பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராயங்களை விளக்குக.
வினா 9 (கட்டாயம்). Paper III · "இலக்கியமும் சமநோக்கும்" அல்லது "மூத்தம்மா" பாத்திரங்கள் (15 புள்ளிகள்) த11·அ9
4. "இலக்கியமும் சமநோக்கும்" என்ற கட்டுரையில் இலக்கியத்துக்கும் இலட்சியத்துக்குமிடையிலான தொடர்பை வலியுறுத்துவதற்கு ஆசிரியர்,
(அ) சிலப்பதிகாரம்
(ஆ) மகாபாரதம்
ஆகியவற்றைக் கையாண்ட முறையை விளக்குக.

அல்லது

"மூத்தம்மா" என்ற சிறுகதையில்,
(அ) காசீம்
(ஆ) மூத்த வாப்பா
ஆகிய பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளவாற்றை விளக்குக.
வினா 10. Paper III · "சீறி ஓடாத வருங்கால மனித நதி" (Q5/6/7 — ஒன்றை தேர்க, 10 புள்ளிகள்) த11·அ6
5. 'சீறி ஓடாத வருங்கால மனித நதி' என்ற கவிதையில்,
(அ) எழுத்தறிவின்மையின் அவலம்
(ஆ) எழுத்தறிவில்லா இளைஞன்மீது கவிஞர் கொண்ட பரிவு
என்பன புலப்படுமாற்றை விளக்குக.
வினா 11. Paper III · "தமிழ்ப் பண்பாடு" — பக்தி மற்றும் ஒழுக்கம் (Q5/6/7, 10 புள்ளிகள்) த11·அ3
6. 'தமிழ்ப் பண்பாடு' என்ற கட்டுரையில்,
(அ) பக்தி
(ஆ) ஒழுக்கம்
என்பன எவ்வாறு விளக்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவுபடுத்துக.
வினா 12. Paper III · "பாரதியாரது சுயசரிதை" (Q5/6/7 — ஒன்றை தேர்க, 10 புள்ளிகள்) த11·அ6
7. பாரதியாரது சுயசரிதையினை ஆதாரமாகக் கொண்டு:
(அ) எத்தகையோரால் தாம் விரும்பியவற்றை அடைய முடியாது?
(ஆ) தாம் விரும்பியவற்றை அடைய முடியாத நிலையில் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்வர்?

பகுதி I — புறவய வினாக்கள் (MCQ)

MCQ விடைகள் புறவய விடைகள் உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் சரிபார்க்கவும். ✓ குறி திட்டமிட்ட விடையை மட்டும் குறிக்கிறது.
  1. 'சூழ மேதி இறங்கும் துறையில்' — இங்கு மேதி என்பது:
    1. யானை
    2. அன்னம்
    3. எருமை
    4. மான்
  2. 'கோது இலான் இந்த மொழி கூறுதலும்' — இங்கு கோது என்பது:
    1. செல்வம்
    2. பாதுகாப்பு
    3. அறிவு
    4. குற்றம்
  3. 'ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர்' — இங்கு தமர் என்பதன் எதிர்க்கருத்து:
    1. உறவினர்
    2. பிறர்
    3. பகைவர்
    4. உற்றார்
  4. 'சண்டமாருதம் அடித்து ஒய்ந்தது' — சண்டமாருதம் என்பதன் எதிர்க்கருத்து:
    1. மந்தமாருதம்
    2. அமைதி
    3. சூறாவளி
    4. கடும்புயல்
  5. 'பெண்களுக்குத் தம்பதியே பெருந்தெய்வம்' — தம்பதி என்பது:
    1. கணவன் - மனைவி
    2. தம்முடைய கணவன்
    3. தம்முடைய கர்த்தன்
    4. தாம்பத்திய வாழ்க்கை
  6. பின்வருவனவற்றுள் பொருத்தமற்ற சொற்களின் இணைவு:
    1. நெல் - அரிசி
    2. கற்றாழை - சோறு
    3. அவரை - பருப்பு
    4. தோடை - சதை
  7. 'சிலமன்' என்னும் பேச்சுவழக்குச் சொல் உணர்த்தும் பொருள்:
    1. காட்சி
    2. கேள்வி
    3. சாட்சி
    4. அறிகுறி
  8. ஆபரணம், பாத்திரம், கப்பல் என்னும் பொருள்களைத் தரும் சொல்:
    1. அணி
    2. ஆழி
    3. கலம்
    4. ஏனம்
  9. 'டிமான்ட்' என்பதற்கு நிகராகத் தமிழில் வழங்கும் கலைச்சொல்:
    1. பெறுமதி
    2. கேள்வி
    3. மதிப்பு
    4. தேவை
  10. ஒருவரின் அறிவுக்கூர்மையைச் சுட்டுவதற்குக் கையாளப்படும் அருஞ்சொற்றொடர்:
    1. ஒல்காப் பெரும்புகழ்
    2. கருவிலே திருவுடையோன்
    3. நுண்மாண் நுழைபுலம்
    4. சொல்லின் செல்வர்
  11. நீண்ட காலம் வாழ்பவன் என்பதைக் குறிக்கும் சொல்:
    1. சஞ்சீவி
    2. சிரஞ்சீவி
    3. அமரன்
    4. அசகாயன்
  12. ஆண் இனத்தை 'கடுவன்' என்ற சொல்லால் குறிக்கும் வழக்கம் அற்ற விலங்கு:
    1. நாய்
    2. குரங்கு
    3. குதிரை
    4. பூனை
  13. 'உரைகல்' என்ற மரபுத்தொடர் உணர்த்தும் பொருள்:
    1. சான்று
    2. உறுதி
    3. காட்சி
    4. தெளிவு
  14. நிகழ்ச்சியை முன்கூட்டியே நிகழ்த்திப்பார்க்கும் செயற்பாடு:
    1. அரங்கேற்றம்
    2. வெள்ளோட்டம்
    3. பரீட்சார்த்தம்
    4. ஒத்திகை
  15. அடிப்படைத் தகுதி இல்லாதவரால் செய்ய இயலாது என்பதைக் குறிக்கும் பழமொழி:
    1. அச்சாணி இல்லாத்தேர் முச்சாணும் ஓடாது
    2. அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்
    3. ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்
    4. கனவிற் கண்ட பணம் செலவுக்கு உதவுமா?
  16. 'அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடாதே' — வலியுறுத்தப்படுவது:
    1. நன்றியுணர்வு
    2. துரோகத்தனம்
    3. நிதானம்
    4. நேர்மை
  17. 'காலைவாருதல்' என்ற மரபுத்தொடர் உணர்த்தும் பொருள்:
    1. கால் இடறல்
    2. ஏமாற்றுதல்
    3. காலூன்றல்
    4. எதிர்த்துநிற்றல்
  18. பின்வருவனவற்றுள் இணைமொழி:
    1. ஆடியாடி
    2. கன்னங்கரிய
    3. ஓடியாடி
    4. நெறுநெறு
  19. (அ) நன்றாகப் படித்தவர்தான். (ஆ) மேடையில் ஏறிப் பேசுவதென்றால் அவருக்கு நடுக்கம். — இவற்றை இணைக்கும் இணைப்பிடைச்சொல்:
    1. ஆகவே
    2. என்றாலும்
    3. ஆதலால்
    4. ஏனெனில்
  20. பின்வருவனவற்றுள் பெயரடியாகப் பிறந்த வினைச்சொல்:
    1. சித்திரித்தான்
    2. பெற்றான்
    3. காட்டினான்
    4. வாழ்க
  21. ககரம் 'G' என்ற ஆங்கில எழுத்துக்கு நிகராக ஒலிக்கும் சொல்:
    1. கப்பல்
    2. தேகம்
    3. தங்கம்
    4. சுகம்
  22. இடைநிலை அமையப்பெற்ற பெயர்ப்பகுபதம்:
    1. ஓதல்
    2. மரங்கள்
    3. கூத்தன்
    4. அறிஞன்
  23. பின்வருவனவற்றுள் வினையடை:
    1. நடந்து
    2. நேற்று
    3. அழகான
    4. வேகமான
  24. பின்வருவனவற்றுள் வேற்றுமைத் தொகையாய் அமைந்த தொடர்:
    1. குடும்பச் சொத்து
    2. தேடிய சொத்து
    3. பொதுச் சொத்து
    4. அழியாச் சொத்து
  25. பின்வருவனவற்றுள் இயல்பு புணர்ச்சி இடம்பெற்ற சொல்:
    1. மணியோசை
    2. கடலலை
    3. பூங்கொடி
    4. மரவேர்
  26. 'செத்த மாட்டில் உண்ணி கழன்றது போல' — இத்தொடரில் இடம்பெற்ற வேற்றுமைப் பொருள்:
    1. இடம்
    2. ஒப்பு
    3. நீங்கல்
    4. ஏது
  27. 'சாலச் சிறந்தது' — சால என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள்:
    1. பொருத்தம்
    2. உறுதி
    3. கூர்மை
    4. மிகுதி
  28. 'கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' — கற்றோர் என்பது:
    1. தொழிற்பெயர்
    2. காரணப்பெயர்
    3. வினையாலணையும்பெயர்
    4. ஆக்கப்பெயர்
  29. பின்வருவனவற்றுள் பொருத்தமற்ற உதாரணம் இடம்பெற்றுள்ள தொகுதி:
    1. அஃறிணை: மரம், செடி, குருவி
    2. ஆண்பால்: வந்தான், படித்தவன், நோயாளி
    3. பெண்பால்: மங்கை, தங்கை, வந்தாள்
    4. பலர்பால்: ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்
  30. பின்வருவனவற்றுள் பொருத்தமற்ற உதாரணம் இடம்பெற்றுள்ள தொகுதி:
    1. உவமைத்தொகை: பால்நிலா, மதிமுகம், கயல்விழி
    2. உம்மைத்தொகை: வீடுவாசல், கோயில்குளம், சோறுகறி
    3. பண்புத்தொகை: வெண்சங்கு, நேர்கோடு, வட்டநிலா
    4. வினைத்தொகை: ஏவுகணை, சுடுசோறு, கடுகதி
  31. வீதி அபிவிருத்தித் திட்டத்தால் தம் காணிகளை இழந்தவர்களுக்கு தக்க _________ வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
    1. உதவி
    2. இழப்பீடு
    3. காப்பீடு
    4. அனுசரணை
  32. நிருவாக சேவைக்கு ஆட்சேர்ப்பது தொடர்பான அறிவித்தல் அரச _________ வெளியிடப்பட்டுள்ளது.
    1. சுற்றறிக்கையில்
    2. சட்டமூலத்தில்
    3. வர்த்தமானியில்
    4. விளம்பரத்தில்
  33. ஜனாதிபதி தேர்தலுக்குரிய _________ தாக்கல் செய்வதற்கான முடிவுத்திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    1. பதிவு
    2. விண்ணப்பம்
    3. வேட்புமனு
    4. விஞ்ஞாபனம்
  34. எமது பாடசாலை தாபிக்கப்பெற்று ஐம்பது ஆண்டு நிறைவடைந்தமையைக் கொண்டாடும் முகமாக _________ இடம்பெறவுள்ளது.
    1. வைரவிழா
    2. மணிவிழா
    3. வெள்ளிவிழா
    4. பொன்விழா
  35. தேசிய _________ காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொல்பொருள்கள் எமது நாட்டின் வரலாறை உணர்த்துகின்றன.
    1. கலாபவனத்தில்
    2. நாதனசாலையில்
    3. சுவடிகள் காப்பகத்தில்
    4. காட்சிக்கூடத்தில்
  36. ஆணைக்குழுவின் _________ உயர்கல்வி விருத்திக்குப் பெரிதும் உதவும்.
    1. நிபந்தனைகள்
    2. கோரிக்கைகள்
    3. பரிந்துரைகள்
    4. பிரேரணைகள்
  37. இக்கவிதை மூலம் கவிஞர் வாசகரிடம் ஏற்படுத்த முயலும் உணர்ச்சி யாது?
    1. அச்சம்
    2. ஏமாற்றம்
    3. நகைச்சுவை
    4. திகைப்பு
  38. 'விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்ததைப் போல்' என்னும் உவமை கையாளப்பட்டதன் நோக்கம்:
    1. விழுதின் தோற்றத்தை உணர்த்துதல்
    2. குரங்கின் பதற்றத்தை உணர்த்துதல்
    3. குரங்கின் இயல்பை உணர்த்துதல்
    4. பாம்பின் பயங்கரத்தை உணர்த்துதல்
  39. இப்பாடல் விவரிக்கும் காட்சியோடு மிகப் பொருந்தி வரும் பழமொழி:
    1. கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே
    2. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்
    3. மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது
    4. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
  40. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை முறைப்படுத்துக. (அ) அவ்வகையாகத் தமிழிலே தோன்றிய முதலாவது காவியம் சிலப்பதிகாரமாகும். (ஆ) காவியம் என்பது ஒரு பேரிலக்கிய வடிவமாகும். (இ) அது இளங்கோவடிகளால் பாடப்பட்டது. (ஈ) அது ஒரு கதையினை, தொடர்ச்சியாக அமையும் பல செய்யுள்களால் எடுத்துரைப்பது. (உ) அவரைப் போலவே சாத்தனார் மணிமேகலை என்ற காவியத்தைப் படைத்தார்.
    1. ஈ, அ, இ, ஆ, உ
    2. ஈ, அ, ஆ, இ, உ
    3. ஆ, ஈ, அ, இ, உ
    4. ஆ, இ, உ, அ, ஈ
← அனைத்து வினாத்தாள்களும்